தமிழ்நாடு
சென்னைக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறை சுற்றுலா செல்வதற்கு வசதியாக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த விவரங்கள் இதோ:
1. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்:
ஏப்ரல் 22-ந்தேதி முதல் ஜூன் 24-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் 24-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
2. தென்காசி – நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்: ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஜூன் 26அம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மதுரைக்கும், 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்து சேரும்.
மேற்கண்ட இரண்டு ரயில்களையும் தென்மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.