தமிழ்நாடு

தனியார் டிவி அலுவலகத்தில் வாள், கேடயத்துடன் நுழைந்த மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு

Published

on

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வாள் மற்றும் கேடயத்துடன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவர் தனது பையிலிருந்து வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றை எடுத்து அலுவலக கண்ணாடி கதவுகள் எல்இடி டிவிகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை உடைத்தார்.

மேலும் அங்கிருந்த ஊழியர்களையும் பத்திரிகையாளர்களையும் மிரட்டியதோடு டிவி அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் அந்த மர்ம நபர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்

இதுகுறித்து கல்மண்டபம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பதும் டெல்லி, குஜராத் பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்ததும் தெரிய வந்தது

இதனையடுத்து தாக்குதல் நடத்திய நபரிடமிருந்து நீண்ட வாள், கேடயம், இரண்டு லேப்டாப், கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version