கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரை தொடர்ந்து மட்டை வீச்சாளரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நேற்று சென்னை சூப்பர்கின்ஸ் நிர்வாகிகள் இருவர் மற்றும் தீபக் சாஹருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ, “ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அமீரகம் சென்றவர்களுக்கு இதுவரை 1,988 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இவர்கள் உடன் ஹோட்டல் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஐபிஎல் சிறப்பு மருத்துவகுழு தீவிர சிகிச்சை வழங்கி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version