கிரிக்கெட்
சி.எஸ்.கே அணியில் இதுவரை உள்ள வீரர்களின் நிலவரம்!
![csk final - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/csk-final.jpg)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, மொயின்கான், ருத்ராஜ் ஆகிய நால்வர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய ஏலத்தில் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ ஆகிய இருவரை மட்டுமே சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சிஎஸ்கே அணி பிராவோவை 4.4 கோடி ரூபாய்க்கும், ராபின் உத்தப்பாவை 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சிஎஸ்கே அணியிடம் இன்னும் 41 கோடி மீதம் இருக்கையில் இன்னும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் உலகின் பிரபல ஆட்டக்காரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் விலை போகவில்லை என்பது பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.