தமிழ்நாடு

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்: ஞாயிறு ரயில் உண்டா?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்தவித போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

சென்னையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக மெட்ரோ ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து தகவல் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னையில் மின்சார ரயில்களிலும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

சென்னையில் மின்சார ரயில்கள் ஊரடங்கு காரணமாக இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை குறைவான எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயங்கும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version