தமிழ்நாடு
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: பொதுத்தேர்வு காரணமா?
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி என்பவரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜான்சி ராணியின் மகளுக்கு கையில் அடி பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கையில் வலி அதிகமாக இருந்ததால் பொதுத்தேர்வு எழுதமுடியாது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை அவர் தனது தாயாரிடம் சொல்லி புலம்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ஜான்சிராணி கடைக்கு சென்று உணவு வாங்கச் சென்றபோது திடீரென அவரது மகள் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் முதல்கட்ட விசாரணையில் கையில் அடிபட்டதால் தேர்வு எழுத முடியாமல் சென்று விடுமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.