தமிழ்நாடு
சென்னை பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் இதனை அடுத்து இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவானதை அடுத்து பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் ஏற்கனவே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு-தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்ற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 6 முதல் 9 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முழு ஆண்டு தொடங்கும் என்றும் தேர்வு மே 12 தேர்வுகள் முடியும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.