தமிழ்நாடு

சென்னை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் தகவல்!

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்று 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் இதில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். நேற்று மாலை முதல் சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருவதன் காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இதனை அடுத்து இன்று 22 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக இன்று மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version