தமிழ்நாடு

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அதிகாரபூர்வ அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இன்று சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை மற்றும் புதுவை இடையே கரையை கடக்க இருப்பதாகவும் அதனால் சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்றும் அதிக வேகத்துடன் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை என சற்று முன் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version