தமிழ்நாடு
வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம்: 30 வருடங்களுக்கு பின் சென்னை திரும்பியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த நாகலிங்க மூர்த்தி என்பவர் கடந்த 1988ஆம் ஆண்டு 2,400 சதுர அடி நிலத்தை வாங்கி வீடு ஒன்றை கட்டினார். அதன் பின்னர் அவர் வேலை காரணமாக பெங்களூர் சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து தற்போது சென்னைக்கு வந்தபோது தன்னுடைய வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜமன்னார் என்பவர் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்த வீட்டை தன்னுடைய பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றிக் கொண்டு அந்த இடத்தில் ஆறு மாடி கட்டடத்தை கட்டி உள்ளது தெரிந்தது.
இதனை அடுத்து இராஜமன்னார் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகள் கழித்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி, தன்னுடைய உறவினர் ஒருவருக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
LandGrabbing is a rampant crime in Chennai city. Years ago, in Madippakkam, My own relative sold me somebody else's land with fake documents.
Cut to present, someone trying to sell my relative's land in gerugambakkam using fake documents !https://t.co/WwL4LQVd0A— Kasturi Shankar (@KasthuriShankar) February 12, 2021