தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்

Published

on

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

அரபிக்கடல் பகுதியில் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு இரண்டு நாட்களாக உள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை உள்பட வட தமிழகத்தை பொறுத்தவரை பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வந்தாலும் சென்னையை பொறுத்தவரை அதிக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 5 தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது’ என கூறியுள்ளார்.

சென்னைக்கு அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என சென்னை மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version