தமிழ்நாடு

சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும் கனமழை: மகிழ்ச்சியில் மக்கள்

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இன்று காலை சரியாக ஐந்து முப்பது மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருவதாகவும் இதனால் சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருவதாகவும் இதனால் சென்னை முழுவதும் தற்போது குளிர்ச்சியான தட்ப வெட்பம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் காரணமாக தவித்து வந்த நிலையில் இந்த மழை சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இன்னும் ஒரு சில நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version