தமிழ்நாடு

சென்னை மழை பாதிப்பு: உயர்நீதிமன்றம் தாமாக விசாரணை செய்கிறதா?

Published

on

சென்னை மழை பாதிப்பு குறித்து தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதிகள் அதிரடி பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் இன்னும் அழியாமல் இருப்பதால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது என்பதும் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மழை பாதிப்பை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருகிறது என்றும், தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க அவகாசம் தந்து அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version