Connect with us

தமிழ்நாடு

குடிசைமாற்று வாரிய கட்டிட விவகாரம்: 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

Published

on

சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதும் இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடிசை மாற்று வாரிய கட்டிடம் முறைகேடு குறித்து எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் அன்பரசன் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்டில் சேர்ப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கட்டிட விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தில் ஈடுபட்டிருந்த உதவி பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் அன்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குடிசை மாற்று வாரிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்றும் ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவரது பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ள நிலையில் அது குறித்த நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.

இந்தியா53 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!