தமிழ்நாடு
ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம்: சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம் என சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. உரிய வசதிகளுடன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆக மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளும் கிட்டத்தட்ட நிரம்பியிருக்கும் நிலையில் கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள், அரசின் கட்டிடங்கள் ஆகியவை கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒரு இமெயில் மட்டும் அனுப்பி தகவல் அனுப்பினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என தெரிகிறது.