தமிழ்நாடு
சென்னை போத்தீஸ் ஊழியர்களுக்கு கொரோனா: கடையை மூட உத்தரவு!
சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர் ஜவுளி கடையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த கடை மூடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அதே குரோம்பேட்டை பகுதியில் உள்ள போத்தீஸ் கடை ஊழியர்கள் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து போத்தீஸ் கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது
அடுத்தடுத்து இரண்டு பெரிய கடைகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.