தமிழ்நாடு

யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை! மீறினால் கைது நடவடிக்கை!!

Published

on

ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் வைத்திருப்பவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இணைய வசதி பெருகி விட்ட நிலையில், பிரபலமாவதற்காக ஒருசிலர் இதுபோன்று ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதும், அதன்மூலமாக காசு சம்பாதிப்பதும் தொழிலாக வைத்துள்ளனர்.  இந்நிலையில்,  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த ஒரு யூடியூப் சேனல் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை பதிவிட்டுள்ள யூடியூப் சேனல்கள், அதுபோன்ற வீடியோக்களை நீக்கும்படி சென்னை காவல்ஆணையர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி யாராவது ஆபாசமான வீடியோக்களை வைத்திருந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

Trending

Exit mobile version