தமிழ்நாடு
தேர்வெழுதி வீடு திரும்பிய சென்னை மாணவன் தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!
இன்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய சென்னை மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும் நிலையில் இன்று பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மதுரவாயலை சேர்ந்த மாணவர் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவர் தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.