தமிழ்நாடு

சென்னையில் உள்ள முருகன், அம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு!

Published

on

சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது

சென்னை மாவட்டம் வடபழனி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், கந்தக்கோட்டம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சென்னை சூளை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், பாடி அருள்மிகு பகவதி திருக்கோயில் மற்றும் அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்து பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு தரிசனம் செய்வார்கள்

தற்போது கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் 9 முடிய அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருக்கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version