செய்திகள்

அதி கனமழை எதிரொலி – சென்னை வாசிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…

Published

on

அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதாவது சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, தருமபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 நாளைக்கு அதி கனமழை பெய்யும் என்பதால் 2 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பால், காய்கறி , மளிகை பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version