தமிழ்நாடு

சென்னை கனமழை எதிரொலி: மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு!

Published

on

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயிலில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்பதும் ஒரு சில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையிலும் சாலை வழி போக்குவரத்தில் இருசக்கர, நான்கு சக்கர மற்றும் பேருந்துகள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களின் வசதியை கணக்கில் கொண்டு சாலை போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னையில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் அரசு விடுமுறை என்றாலும் கனமழை காரணமாக இன்று காலை 05.30 மணி இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version