தமிழ்நாடு

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Published

on

வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அடுத்த ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் இன்றும் அறிவிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவுக்கு வந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

author avatar
seithichurul

Trending

Exit mobile version