தமிழ்நாடு
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
![kerala rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/kerala-rain.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் கடந்த 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என நேற்று அறிவிக்கப்பட்டதோடு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த நான்கு மாவட்ட நிர்வாகிகள் பாதுகாப்பு அம்சங்களை ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே சென்னையில் விடிய விடிய நேற்று மழை பெய்து வந்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் கூடுதலாக மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.