தமிழ்நாடு
22 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, குமரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.