தமிழ்நாடு
அடுத்த 3 மணிநேரத்திற்குள் சென்னை உள்பட 15 மாவட்டங்களின் கனமழை: வானிலை எச்சரிக்கை!
அடுத்த மூன்று மணி மணிநேரத்திற்குள் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மூன்றாவது முறையாக தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் நாளை முதல் அதிக மழை சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.