தமிழ்நாடு
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
![meteorological - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/meteorological.jpg)
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வந்தது என்பதும் இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக சென்னை தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மட்டுமின்றி திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சில மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
ஏற்கனவே அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் தற்போது அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியதாகவும் இதன் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு, கேரளா மற்றும் தென்தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரண்டிலும் பலத்த காற்று வீசும் என்றும் 60 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது