தமிழ்நாடு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
அந்த அறிவிப்பில் மார்ச் 2-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள இந்த 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.