தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version