தமிழ்நாடு
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்!
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றி உள்ளதை அடுத்து சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றி உள்ளதால் கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மேலும் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.