தமிழ்நாடு
3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்னும் மூணு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மதியம் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் [இதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.