தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் பகுதிகள் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை இன்றும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் அரபிக் கடலுக்கு ஐந்து நாட்களும், கேரள கடல் பகுதிக்கு மூன்று நாட்களும் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கோவை நகரில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் வால்பாறையில் மழை தொடர்ந்து வருவதாகவும் இதனை அடுத்து தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.