தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மேலும் ஜூலை 2ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ஜூலை 3ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version