தமிழ்நாடு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும் நாளையும் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்றும், குறிப்பாக நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று வங்க கடலில் தென்மேற்கு, தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் இன்று முதல் ஆகஸ்ட் 4 வரை தென் மேற்கு மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் நான்கு நாட்களுக்கு இந்த பகுதிகள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.