தமிழ்நாடு
இன்னும் ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த 8 மாவட்டத்திலுள்ள மக்கள் முன் பாதுகாப்புடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.