தமிழ்நாடு
இன்று 16 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய பகுதிகள் பின்வருமாறு:
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.