தமிழ்நாடு

இன்னும் சிலமணி நேரங்களில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி விட்டதை அடுத்து இன்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக இன்று ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை புதுக்கோட்டை, கோவை, திருச்சி ஆகிய 9 மாவட்டக்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்னும் மூன்று மாதங்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version