தமிழ்நாடு

ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்டும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 7ஆம் தேதி முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என்றும் கனமழை குறித்த தகவல்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதேநேரம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் இந்த மழை காரணமாக முழுமையாக பூர்த்தி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version