தமிழ்நாடு

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published

on

இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 13, 14, 15 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும், பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளீல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் புதிதாக வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு என்றும், குறிப்பாக தமிழகம் ஆந்திரா ஒரிசா ஆகிய மாவட்டங்கள் ஆகிய மாநிலங்களில் காற்றழுத்தம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் கிட்டதட்ட நிரம்பி உள்ளதாகவும் இதனால் இந்த ஆண்டு பொது மக்களுக்கு தண்ணீர் கஷ்டம் ஏற்படாது என்றும் தெரிகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version