தமிழ்நாடு

சென்னையில் இன்று மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விபரங்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சற்றுமுன் அறிவித்துள்ளது

தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிதமான மழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா ஒட்டிய கடல் பகுதியில் நிலவுகிறது என்றும் அதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் நாளை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், தேனி திண்டுக்கல் தென்காசியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் நாளை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version