தமிழ்நாடு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் பகுதிகள் குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அடுத்த 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இதனால் மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அதேபோல் வங்கக் கடலுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது