தமிழ்நாடு
இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து உள்ளதை அடுத்து மழை பெய்யும் இடங்கள் குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி திண்டுக்கல் தென்காசி மற்றும் உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாளை நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 18 19 ஆகிய தேதிகளில் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாளை வரை தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஜூலை 19-ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு என்றும், பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.