தமிழ்நாடு
5 நாட்களுக்கு வெளுத்து கட்டப்போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் நாளைய தினம் கோவை சேலம் நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நீலகிரி கோவை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது