தமிழ்நாடு

இன்னும் ஒருசில மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டஞ்களில் நீர்நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் சற்று முன் வெளியான அறிவிப்பு ஒன்றில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version