தமிழ்நாடு

7 மாவட்டங்களில் மிககனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தஞ்சை, திருவாரூர், அரியலூர், நாகை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்த பகுதியில் உள்ளவர்கள் முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மட்டுமன்றி இன்னும் ஒரு சில நாட்களுக்கு தொடர்ச்சியாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version