தமிழ்நாடு

அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகத்துடன் இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்க கடல் பகுதியில் செப்டம்பர் 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி கோவை, தர்மபுரி ஆகிய பகுதிகளில் ஒரு செமீ முதல் 9 செமீ வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போகிறது என்ற தகவல் தமிழக மக்களை மகிழ்ச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version