தமிழ்நாடு

அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது என்பதை பார்த்தோம்.

அந்தவகையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிவிப்பின்படி சென்னை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என இன்று காலை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் இன்னும் ஒரிரு மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த ஓரிரு மணி நேரத்தில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version