தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழக மழை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்த அறிவிப்பின்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் இன்றும் நாளையும் மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது ஜூலை 26, 27இல் சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி வருவதால் கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version