தமிழ்நாடு
ஸ்டாலின், அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இடமாற்றம்!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தில் திடீரென கனமழை கொட்டியது. இந்த மழையை முன்கூட்டியே சென்னை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறி விட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் வானிலை நிலவரங்கள் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.