தமிழ்நாடு

நெஞ்சுக்கு நீதி: அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை அடுத்து மேயர் பிரியாவும் பாராட்டு

Published

on

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை திமுக அமைச்சர்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்துள்ளனர் என்பதும், திமுக எம்எல்ஏக்களும் பார்த்து தங்களது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட இது குறித்து தனது கிண்டலான பதிவை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களை அடுத்து தற்போது சென்னை மேயர் பிரியவும் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எல்லாரும் சமம்னா யாரு Sir ராஜா?/ உதயநிதி ஸ்டாலின் அண்ணா நடப்பு மற்றும் அழுத்தமான திரைக்கதை ஆகியவற்றால் நெஞ்சுக்கு நீதி நேர்த்தியான படமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version