தமிழ்நாடு

சென்னை மேயர் ப்ரியாவின் அதிரடி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி!

Published

on

சமீபத்தில் சென்னை மேயராக பதவி ஏற்ற ப்ரியாவின் அதிரடி அறிவிப்பு மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராக ப்ரியா தேர்வு செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே .

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என மேயர் தெரிவித்துள்ளார் .

இன்று ஜாபர்கான்பேட்டையில் உள்ள பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த மேயர் ப்ரியா, செய்தியாளர்களிடம் பேசியபோது சென்னை மாநகராட்சியில் உள்ள சில பகுதிகளில் மட்டும் தான் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக நாப்கின் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு மாநகராட்சி பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version